புதன், 26 ஜனவரி, 2011


"ஏன்டா இப்போவெல்லாம் எழுதுறதே இல்லை?" என்கிற நிறைய ஆதங்கமான(!) கேள்விகளுக்கு எத்தனை மொக்கை காரணங்கள் சொன்னாலும் உண்மை வேறாய் இருக்கிறது.."தினமும் ரெண்டு பக்கமாணும் எழுதியே ஆவணும்"என்கிற வயித்து வலியோ அல்லது "தெனமும் படுக்கறதுக்கு முன்னாடி ரெண்டு கவிதையேனும் எழுதாட்டி இந்த ஜென்மம் எடுத்ததுக்கு பலனே இல்லையாக்கும்"என்கிற திருகு வலியோ இல்லாமல் படுத்தவுடன் நிம்மதியாய் தூங்க முடிகிறது!

இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நம் தொலைக்காட்சிகள் வழங்கிய எந்த குப்பையும் பொறுக்கி தின்னாமல் அணிவகுப்பு மட்டும் பார்க்கையில் ஒரு கேவலம் ....வங்காள நடை மேடை வந்த போது மம்தா வையும் பிரணாப் முகர்ஜி யையும் க்ளோசப்பில் காண்பித்த காமிரா கேரளா நடை மேடை வந்த போது காண்பித்த திருமுகம் யாருடையது தெரியுமா?....வீரப்ப மொய்லி !! கருப்பாய் குள்ளமாய் மீசை வைத்திருப்பவன் எல்லாம் மதராசி ...தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் என நான்கு மொழிகளும் நான்கு வேவ் வேறு இனங்களால் பேசப்படும் மொழி என்றோ அவை தனி தன்மை உடையவை என்கிற கவனமோ இன்றி நீங்கள் எல்லாருமே மதராசி என்கிற ஒரு அசட்டு மேம்போக்கான திமிர் இங்கு எல்லோருக்குமே உண்டு..வேண்டுமானால் ஒரு சவால் விட்டு பாருங்களேன் உங்கள் அலுவலகத்தில் அல்லது சக வடநாட்டு நண்பர்களிடத்தில் ..ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அதிலிருக்கிற நான்கு தென்னிந்திய மொழிகளையும் மிகச்சரியாய் இனம் கண்டு கொண்டால் அந்த நோட்டை எடுத்துக்கொள்ளலாம் என..எத்தனை பேர் கிழிக்கிறான் என்று பாருங்கள்!! இந்த விஷயத்தில் படித்தவன், மேல்தட்டு என்று ஒரு வித்தியாசமும் கிடையாது!! நல்லதாய்போயிற்று தமிழ் நாட்டிலிருந்து ஒரு பல்லக்கும் வரவில்லை..நமக்கு மூத்த தமிழறிஞர் (!) குடும்பத்துக்கு பல்லக்கு தூக்கவே ( நாகரீகம் கருதி "குண்டி நக்க" என்று எழுதவில்லை!)நேரம் போதவில்லையே! அப்படியே கொஞ்ச நஞ்சம் நேரம் கிடைத்தாலும் தமன்னா மேடம்s கார்த்தி சார் தனுஷ் சார் உலக நாயகன் சார் இளைஞன் சார்..களின் அறிவாடல் களின் பகிர்தலில் திளைத்து விடுகிறதை தவிர்க்க முடிகிறதா?!

01/2/11

கிரண் ராவ் இயக்கிய DHOBI GHAAT படம் இரவு பார்த்தோம் ...நம்ப முடியவில்லை..அதி அற்புதமான ஒரு சினிமா அனுபவம்..கசாட்டா ஐஸ் க்ரீம் என்று பாமரத்தனமாக ஒப்பிடலாம் நான்கு பேரின் வாழ்கையின் ஒரு slice .... மிக நேர்த்தியாய் அதே சமயத்தில் மிக நேர்மையாய் எடுக்கப்படிருக்கிற ஒரு படம்..கதை உத்தி இந்திய சினிமாவுக்கு புதிது..அதிலும் என்னை அதிகம் ஈர்த்தது பாத்திர தேர்வு.. நான்கே நான்குமுக்கிய பாத்திரங்கள் .. நான்கு மனிதர்களின் வாழ்வியல் உள்நோக்கு ..இடையூடாக வந்து போகும் மூன்று சிறு பாத்திரங்கள் ...அவர்களுக்கும் ஒரு முக்கியத்துவம் கொடுத்து பார்வையாளனின் மனதில் நிறுத்துதல் என அதி அற்புதமான ஒரு திரைக்கதை.. .ஒரு கேரைக்டரை எவ்வளவு நுணுக்கமாய் அவதானித்து உள்வாங்கி அதில் ஒரு நடிகனின் திறமையையும் கலந்து துல்லியமாய் வெளிக்கொணர்வதில் ஆமிர், டென்சில் வாஷிங்டன், சியான்பென்ன் , டோம் ஹான்க்ஸ் ஆகியோரின் ஒரு இந்திய வார்ப்பு ... சொல்லமுடியும்..என் முந்தைய பதிவான "அபியும் நானும் " எழுதுகையில் நான் முறையிட்ட என் ஆதங்கம் இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது !! அதி அற்புத ஆற்றல் கொன்ட நாயக நாயகிகள் அன்றி சக மனிதர்களின் வாழ்கையை விவரிக்கும் படம் எப்போது வாய்க்கும் என்ற கேள்விக்கு பதில் இந்த படத்தில் காண கிடைத்தது! படம் பார்க்க வருபவனின் அறிவு அளவை ஏற்கனவே தீர்மானித்து அவனுக்கு அவசியம் புரியவைத்தே(!) தீர்வதாய் கங்கணம் கட்டிக்கொண்டு நம் கலை ஞானிகளும், இயக்குனர் சிகரங்களும், ஷங்கர் சார்களும், "மணி" மாமாக்களும் பிரம்ம பிரயர்த்தனம் செய்து தீட்டிய காவியங்கள் போல் அல்லது எந்த ஒரு சால்ஜாப்பும் சப்பைகட்டும் ( ஒத்தலா பஜனையும் என்று படிக்கவும்!) இல்லாமல்பார்வையாளனை , அவன் ரசனை திறனை மதித்து மேம் படுத்தும் விதமாய் எடுக்கப்பட்டிருக்கிற ஒரு படம்...மீண்டும் ஆமிர் பற்றி சொல்லத்தான் வேண்டி இருக்கிறது ...ஆமிருக்கு கண்களில் எப்போதும் ஒரு நக்கல்... கேலி ததும்பும் பார்வை நிரந்தரமாய் இருக்கும் இது பெரும்பாலும் எல்லா படங்களிலும் காணக்கிடைக்கும்...கடைசி வார்த்தைக்கு பின் லேசாய் இழுத்து பேசுவதும் பழக்கம்..இந்த படத்தில் இவற்றை மொத்தமாய் அழித்துவிட்டு ஒரு அறிவுஜீவி ஓவியனாய் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு வாழ்கையை நிர்ணயித்து அதன் போக்கில் வாழும் ஒரு மிக மென்உணர்வுகொண்ட , கண்களில் சதா ஒரு தேடலும் உதட்டில் கிங்க்ஸ் புகைய வளைய வரும் கலைஞ்சனாய் ஆமிரின் உடல் மொழி முற்றிலும் வேறானது..இந்த தோல் உரித்து தோல் மாற்றும் வித்தை தான் ஒரு நடிகனுக்கு அவசியம் நிகழ வேண்டிய ஒரு பரிணாம வளர்ச்சி.. இது ஆமிருக்கு கைகூடியிருக்கிறது..இங்கு ஐம்பது வருடங்களாய் கலைத்தாயின் முலைகளுக்கு அருகே தூக்கி குடியிருத்தப்பட்டிருக்கும் நம்ம ஊர் ஆஸ்கார் அவதார, உலகநாயன் மார்களுக்கு இந்த பரிணாம வளர்ச்சி எப்போது நிகழப்பெரும் என மாபெரும் எதிர்பார்ப்பு ஒன்று எப்போதும் எனக்கு உண்டு..கூடவே இவர்களை தலையில் தூக்கி வைத்து இறங்கவிடாமல் படுத்தும் நம் ரசிக மா மணிகளின் மேலான ஒரு பரிதாபமும் கூடவே உண்டு...இந்த படம் பார்த்து வெளியே வருகையில் என் பதினைந்து வயது மகள் சொன்ன வார்த்தைகள்.."அப்பா முதன் முதலா ஒரு நல்ல உருப்படியான இண்டர்நேஷனல் படம் இந்தியன் லாங்குவேஜ்ல வந்திருக்கேன்னு திருப்தியா இருக்குப்பா !"..அவள் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 2003 இல் வெளிவந்து சிறந்த படத்துக்கான golden lion விருதும் வெனிஸ் பட விழாவில் சிறந்த முதல் படத்துக்கான விருதும் வென்ற Andrey Zvyagintsev இயக்கத்தில் வெளியான THE RETURN என்கிற ரஷ்ய படம்!!

ஒன்று புரிகிறது... நாற்றாங்கால்கள் வளமாய் இருப்பின் விளைச்சல் நிச்சயம் வளமாய் இருக்கும்!!

செவ்வாய், 18 ஜனவரி, 2011
















மெல்லிய குறுந்தகடில் இருந்து
வெளி வந்து புரிந்த
தூரதேசத்து
ஆண்கள் பெண்களின்
நீண்ட கலவிகளில்
கலந்திருந்தேன்
கௌரவ விருந்தினராக
இரு வெள்ளைப் பெண்களும்
ஒரு கருப்பு இளைஞனும்
உச்சத்தை நெருங்கிய கணத்தில்
சட்டென மறைந்தனர்
மின்சார வெட்டில்
காற்றில் கரைந்திருந்த
கலவிகளின் ஒலிகளுடனும்
கனவுகளில் மிதந்த
கலவிகளின் நினைவுகளுடனும்
நிகழ்ந்து முடிகிறது
தவறவிட்டுவிட்ட
ஒரு தனிமையின் உச்சம்!

"கோ நா" என்கிற யாரோ ஒருவர் எழுதி போன வார விகடனில் வெளிவந்த கவிதை இது!
சந்தோஷமாய் இருக்கிறது... விகடனில் இது போன்ற கவிதை வெளிவந்ததில்! நீலப்படம் பார்த்தல் அதன்பின் சுய இன்ப அனுபவங்கள் என அதிகம் பேச பயந்த நம் வெகுஜன பாச்சாண்டி ஊடகங்கள் சற்றே தெளிந்திருக்கின்றன போலும்!!
எனினும் "we are indians we don't talk sex!" என்கிற மனோபாவம் இன்னும் பெரும்பான்மையாகவே இருக்கிறது!
இந்த வருட என் calander வெளிவந்து விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சில வாடிக்கையாளர்கள் தில்லியில் இருந்தும் திருப்பூரில் இருந்தும் " என்ன சார் இதை எப்பிடி ஆபீசில் வைக்கறது..சங்கடமாய் இருக்குமே.."என்று நெளிந்தார்கள். இது சங்கடமா அல்லது தர்ம சங்கடமா என்பது அவரவர் பிரச்சினை! ஆனால் அவர்கள் தனிமையில் இரண்டு முறையேனும் பிரித்து மேய்ந்ததை ஒத்துக்கொண்டார்கள்!
நம்மவர்க்கு காமத்துக்கும் நிர்வாணத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை..நிர்வாணம் அழகியல் சம்பந்தப்பட்டது என்கிற தெளிவே இன்னும் வந்த பாடில்லை!!
முக்காடு போட்டு மூடி வைத்த பெண்ணுடலை சந்தர்ப்பம் கிடைக்கையில் பிரித்து மேய்வது என்கிற வகையில்தான் நிர்வாணம் காமப்படுத்தப்பட்டிருக்கிறது இங்கே! இது இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு பின்னர் தோன்றிய மனோபாவமாய் இருக்கலாம் என தோன்றுகிறது..
முலைப் பிளவும் தொப்புள் குழியும் பிருஷ்ட மேடுகளும் தான் பெண்ணுடல் பற்றிய அறிவாய் நம் சினிமாவும் சினிமா பாடல்களும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் நமக்கு திணிக்கின்றன..அழகியல் குறித்தும் மென் ரசனை குறித்தும் நமக்கு இன்னும் ஒரு விழிப்புணர்வு வரவில்லை என்றே நினைக்கிறேன் நான். இதை யார் சொல்லிக்கொடுப்பார்கள் எது இப்போ ரொம்ப அவசியமா என்றெல்லாம் கேள்வி வரலாம்..இது தான் சரியான சந்தர்ப்பம் என ஒத்த சிந்தனை உள்ளவர்கள் ஒத்துக்கொள்வார்கள்! காமமும் அழகுதான்..ஆனால் vulgarity - sensuality க்கும் வித்தியாசம் தெரியாமல் நாம்தடம் மாறி அதை சரி என்று சால்ஜாப்பும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்! அதனால் தான் பகலில், அலுவலகத்தில் ஒரு நெறியும் வார இறுதி இரவுகளில் வேறு நெறியும் என்றும் உள்ளூரில் ஒரு பிம்பம் வெளி ஊர் அல்லது வெளி நாடு சென்றால் வேறொரு பிம்பமுமாய் நம் பேராண்மையை கட்டிக் காத்துக்கொண்டிருக்கிறோம்!!
நிர்வாணம் அழகு ..உடலும் மனமும் நிர்வாணமாய் இருக்கையில் அதற்கு ஒரு தனி அழகு அமைகிறது ..அதை இனம் காணவும் ரசிக்கவும் ஒரு பக்குவப்பட்ட மனநிலை அவசியம்.. முயன்று பாருங்களேன்..கை கூடும்!!